தமிழ் இலக்கண மரபில் தொல்காப்பியத்திற்குப் பிறகு பெரும் செல்வாக்கு செலுத்திய பவனந்தி முனிவரின் நன்னூல் தனக்கும் பின்பு தோன்றிய இலக்கண நூல்களில்எத்தகையக் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஊடிழைப்பிரதியியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஆரா#கிறது. பிற்கால இலக்கண நூல்களான இலக்கண விளக்கம்ஶீ தொன்னூல்விளக்கம்ஶீ முத்துவீரியம் போன்றவை நன்னூலின் கருத்தியல் சார்ந்த விதிகளை உள்வாங்கியும் நூற்பாக்களை அப்படியே பயன்படுத்தியும்ஶீ சில இடங்களில் மாற்றியமைத்தும் தமக்கான தனித்துவத்தைப் பின்பற்றியும் உருவாக்கம் பெற்றுள்ளன. தமிழ் மரபிலக்கணப் பரப்பில் நன்னூல் என்பது ஒரு முடிவல்ல அது தொடர்இயக்கமாக பிற்கால இலக்கண நூல்களில் சொல்லாகஶீ நூற்பாவாகஶீ கருத்தியல்களாகஊடுருவிச் செல்கின்றது என்பதை இக்கட்டுரை ஆரா#கின்றது
Shanlax (Sun,) studied this question.