பழந்தமிழ் மக்கள் பஞ்சபூதங்களின் ஆற்றலை முதன்மையாக வைத்து ஐந்திணைகளின் அடிப்படையில் தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டனர். அகப்புறம் என்ற உணர்வுகளோடும் சூழலியல் சிந்தனையோடும் வாழ்ந்த அம்மக்கள் இயற்கையை தெ#வமாக மதித்தனர் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வாழ்வியல் கூறுகளான காதல் வீரம், நம்பிக்கை, விளையாட்டு, கையறுநிலை, வழிபாடு ஆகிய அனைத்தும் இயற்கை செயல் திறனை மையமாகக் கொண்டு நூல்களில் குறியீடுகளாக காட்டப்பட்டுள்ளன இதை உலகிற்கு பறைசாற்ற வந்த சங்கப் புலவர்களும் தலைவன்-தலைவியின் காதல் உணர்வுகளையும் மன்னர்களின் வீரம், கொடைத்தன்மையையும் இயற்கையோடு இணைந்த செ#திகளாகவே இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர் என்பதை ஆய்வுக்களமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.
Shanlax (Sun,) studied this question.