பொன்னீலனின் மறுபக்கம் புதினம் மானிடவியல் துறை ஆராய்ச்சியாளர் பக்தவத்சல பாரதி வகுத்துக் காட்டும் தீண்டாமைச் சாதிகளுக்கான எழுத்துச் சான்றுகளாக அமைகின்றது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு அரசனாகப் பொறுப்பேற்ற மலையாள மொழி பேசும் இனத்தைச் சார்ந்த மகாராஜா மார்த்தாண்டவர்மன் தமிழ் மொழி பேசும் மக்களைத் தீண்டாமைச் சாதிகளாக்கி ஊர்கள், நீர்நிலைகள், முக்கிய வீதிகள், கோவில்கள் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைய விடாமல் தடுத்தும் நியாயமற்ற வரிகள் விதித்தும் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கியும் நடத்தியுள்ளான். வரி செலுத்த இயலாதோரை அடிமைகளாக்கி அடிமைச்சந்தைகளில் விற்று விலங்குகள் போல் நடத்தியுள்ளனர். உயர் சாதியினர் எனக் கருதப்படுவோர் கண்களில் பட்டாலே தீட்டு எனக் கருதி கொலை செய்யப்பட்டுள்ளனர். கல்வி கற்கும் உரிமையும் உயர்பணி வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொன்னீலனின் மறுபக்கம் புதினத்தில் பதிவாகியுள்ள திருவிதாங்கூர் சமுதாயத்தின் அடிமைச்சாதிகள் எதிர்கொண்ட அவலங்கள் இங்கு ஆராயப்படுகின்றன.
shanlax (Mon,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: