ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இலக்கண இலக்கிய நூல்களில் அறிவியல் செய்திகள் மிகுதியாகக் காணக்கிடக்கின்றன. நாழிகை கணக்கிடுதல், நன்னிமித்தம் பார்த்தல் ஆகிய வாழ்வியல் நிகழ்வுகள் வானத்தில் உள்ள கோள்களையும் வின்மீன்களையும் அவற்றின் இயக்கங்களை வைத்தே இயங்கியமையை இலக்கியங்களின் வழி தெரிந்துக்கொள்ள முடிகிறது. இவை மரபு வழி அறிவியலாக பரவியவை. இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்பிற்கு உந்து சக்தியாக விளங்குபவை. நல்லந்துவனாரால் பாடப்பட்ட பரிப்பாடல் 11வது பாடல் பழந்தமிழரின் வானியல் குறித்தான நுட்பமான அறிவை வெளிபடுத்துவனவாகும். இப்பாடலுக்கு பரிமேழலகர் உரை இல்லையெனில் அவற்றை இன்றைய நிலையில் அறிதல் சாத்தியமற்றதாகும்.
Shanlax (Sun,) studied this question.