பக்தி இலக்கியங்கள் ஆன்மீக அனுபவங்களை வெளிப்படுத்தும் முக்கிய இலக்கிய மரபாக விளங்குகின்றன. இவ்விலக்கியங்களில் இறைவன், பக்தன் மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றின் உறவு பல்வேறு கலை வடிவங்களின் ஊடாக வெளிப்படுகிறது. அவற்றில் நாட்டியம் அல்லது ஆடல் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், ஆண்டாள் பாடல்கள் போன்ற பக்தி இலக்கியங்களில் சிவனின் தாண்டவம், கண்ணனின் லீலை நடனம், பக்தர்களின் பரவச ஆடல் ஆகியவை நாட்டியச் செய்திகளாக இடம்பெறுகின்றன. இந்த ஆய்வு, பக்தி இலக்கியங்களில் காணப்படும் நாட்டியச் செய்திகள் வெறும் கலைச் சுட்டிகளாக இல்லாமல், ஆழ்ந்த தத்துவ, ஆன்மீக மற்றும் பண்பாட்டுப் பொருள்களைத் தாங்கியவையாக உள்ளன என்பதை விளக்குகிறது. நாட்டியம் உடல் இயக்கமாக மட்டுமல்லாது, ஆன்மாவின் இறைவனுடன் நிகழ்த்தும் உரையாடலாகவும், தத்துவ உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் செயல்படுகிறது என்பதே இந்த ஆய்வின் மையக் கருத்தாகும்.
Shanlax (Sun,) studied this question.