இலக்கியங்கள் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாகின்றன. சமுதாயத்தை எதிரொளிக்காத எந்த இலக்கியமும் மக்களிடம் வரவேற்பை பெறுவதில்லை. பொதுவாக படைப்பாளிகள் தனது படைப்பிற்கான எல்லாச் சிந்தனைகளையும் இந்த சமுதாயத்திடம் இருந்தே பெற்றுகொள்கிறார்கள். எனவேதான் ஒவ்வொரு கால இலக்கியப் படைப்புகளும் அக்காலச் சமுதாயத்தினைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன. இத்தகையச் சூழலில் அறிவுமதியின் கவிதைகளில் பதிவுசெய்துள்ள சமுதாயத்தின் வெளிப்பாடுகளைப் பற்றி இயற்கை எவ்வாறு மாற்றம் அடைந்திருக்கிறது அதன் காரணம், உயிர் நேயம் காணப்படுகிறதா? அதன் தற்போதைய நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நமது பங்களிப்பு, அறிவியல்- அணு- ஆயுதம் வளர்ச்சி எந்நிலையில் உள்ளது, இலக்கியங்கள் வெளிபடுத்தும் மனிதநேயம் வாழ்வியலில் எந்த அளவில் உள்ளன என்பதயெல்லாம் ஆராய்வதாக தமிழ் இலக்கியச் சூழலில் சமுதாயத்தின் வெளிப்பாடுகள் எனும் இக்கட்டுரை அமைகிறது.
Shanlax (2026) studied this question.