சங்க கால இலக்கியங்கள் தொடங்கி பிற்கால இலக்கியங்கள் வரை அற கருத்துக்களையே முதன்மையாக வலியுறுத்தின. சங்க இலக்கியங்களில் காதல் வாழ்க்கை பெரிதும் பேசப்பட்டாலும் அவ்வாழ்க்கையின் ஊடே அற வாழ்வே வலியுறுத்தப்பட்டது. சங்க காலத்திற்கு பின் எழுந்த பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் அற நூல்களாகவே தோன்றின. திருக்குறள் அறம் என்பதிற்கு அழகான விளக்கத்தை தருகின்றது. எந்த நிலையிலும் மாறாத ஒன்றே அறம் என்கிறது குறள். தமிழ் இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு வலியுறுத்திய அறத்தின் இயல்புகள் மற்றும் சிறப்புகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்
Shanlax (2026) studied this question.